பெரம்பலூர்.ஏப்.27 பெரம்பலூர் மாவட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில், 2027 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்ட அலுவலகம், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ள நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு முதற்கட்டமாக மக்கள் தொகை இயக்குநரக இணை இயக்குநர் ஜெகதீசன், துணை இயக்குநர் சுனிதா, புள்ளியியல் ஆய்வாளர் வினய் முரளி ஆகியோர் பயிற்சி வழங்கினர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,”மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது நாட்டின் எதிர்கால திட்டமிடலுக்கு அடிப்படையாகும். நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிப்படையானதாகும்.எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ளவர்கள், தகவல்களை துல்லியமாக சேகரிக்க வேண்டும்.என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், வருவாய் கோட்டாட்சியர் அனிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சொர்னராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *