அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யூர் கிராமத்தில் செல்லத்தம்மன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாவீரர்கண்ணன் நினைவு நாளை முன்னிட்டுகபடி போட்டி நடைபெற்றது.
இந்த போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற அணியினருக்கு ரொக்க பணம் சுழல் கோப்பை கேடயம் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை அய்யூர் செல்லத்தம்மன் ஸ்போர்ட்ஸ் கிளப் விளையாட்டு குழுவினர் செய்திருந்தனர்.