கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பெரியகருமலை பள்ளி முன்னாள் மாணவர்கள் நலச்சங்கத்தினர் நடத்தும் முன்னாள் மாணவர்கள் குடும்ப உறவுகள் சந்திப்பு விழா வரும் மே மாதம் 24 ஆம் தேதியன்று ஆழியார் அறிவு திருக்கோவில் அருகே உள்ள ஜே.பி.கார்டனில் வெகு சிறப்பாக நடைபெற உள்ள நிலையில் ஆழியார் காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் காவல் துறை அனுமதி வேண்டியும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டி அதற்கான அழைப்பிதழை சங்கத்தலைவர் சக்திவேல் தலைமையில் செயலாளர் வேல் பாண்டி, இணைச்செயலாளர் முருகையா, செயற்குழு உறுப்பினர் வன்னியராஜ், அமைப்பாளர்கள் கவிதா, சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் வழங்கினர் மேலும் சங்க உறவுகளுக்கும் அழைப்பிதழை வழங்கி விழா ஏற்பாடுகளை துரிதப்படுத்தி வருகின்றனர்