செங்குன்றம் செய்தியாளர்
மாதவரம், புழல் ஆகிய காவல் நிலையங்களில் 2020 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 40 லட்ச ரூபாய் மதிப்பிலான மூன்றரை டன் எடை கொண்ட குட்கா ஹான்ஸ், கூல் லிப், விமல் பாக்கு போன்ற போதை தரும் புகையிலை பொருட்களை நீதிமன்ற உத்தரவின் படி சென்னை கொடுங்கையூர் குப்பை மேட்டில் லாரிகள் மூலம் எடுத்து வரப்பட்டு அதனை ஜேசிபி இயந்திரம் மூலம் குழிதோண்டி புழல் சரக உதவி கமிஷனர் ராஜ் பால் இன்ஸ்பெக்டர்கள் வசந்த் ராஜா முஹம்மது சபியுல்லா மற்றும் போலீசார் முன்னிலையில் புதைக்கப்பட்டது.