தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொரப்பூர் மேற்கு ஒன்றியம் வகுரப்பம்பட்டி ஊராட்சி பெரிசுனாம்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 1லட்சத்தி 75 ஆயிரம் மதிப்பீட்டிலான பைப்லைன் அமைக்கும் பணிக்கு அரூர் அதிமுக எம்எல்ஏ சம்பத்குமார் பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்,
இந்நிகழ்ச்சியில் கம்பைநல்லூர் நகரச் செயலாளர் கே.கே. தனபால்,கணேசன்,சித்தார்த்,சிங்காரவேல்,சரவணன்,சீனிவாசன்,மனோகரன்,அறிவானந்தம்,மாது,திருநாவுக்கரசு,சின்னதுரை,சிவா,ஜெயபால் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள்,கிராம மக்கள் என பலர் உடன் இருந்தனர்.