சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் அட்வகேட் டாக்டர் சுரேஷ் குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது.

இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹீம்நபி. இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார். நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இவரின் இரண்டாவது மனைவி ஹாஜரா மூலம் ஓர் ஆண் மகவு பிறந்தது. இஸ்மாயில் எனப் பெயரிடப்பட்ட அந்தக் குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள். இஸ்மாயில் பால்யப் பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரைத் தனக்குப் பலியிடுமாறு இறைவன், இப்ராஹிம் நபி கனவின் மூலம் கட்டளையிட்டார்.

இதைப்பற்றி இஸ்மாயிலிடம் கூறிய இப்ராஹிம் நபி அவரின் அனுமதியுடன் பலியிடத் துணிந்தபொழுது, ஜிப்ரயீல் எனப்படும் வானவரை அனுப்பி, இறைவன் அதைத் தடுத்தார். மேலும், ஓர் ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இஸ்மாயயிலுக்குப் பதில் அந்த ஆட்டை அறுத்துப் பலியிடுமாறு இப்ராஹிம் நபிக்கு கட்டளையிட்டார்.

மேற்கூறிய இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே, தியாகத் திருநாள் கொண்டாடப் படுகின்றன. இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடுகளைப் பலியிட்டு, இந்த பண்டிகையை ஹஜ் பெருநாளாக கொண்டாடுகின்றன. இவ்வாறு சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் அட்வகேட் டாக்டர் சுரேஷ்குமார் கூறியுள்ளார்.

உடன் சி.இ.ஓ அட்வகேட் .டாக்டர் மனோகர் ,சர்வதேச செயலாளர் முகமது சலீம்,தமிழ்நாடு மாநில தலைவர் அகமது ரியாஸ், தமிழ்நாடு மாநில கவுரவத் தலைவர் அட்வகேட் டாக்டர் ஹரிதாஸ், தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் அட்வகேட் குணசேகரன் ,புதுச்சேரி மாநிலத் தலைவர் தந்தைபிரியன், புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர்கள் மகேஸ்வர ராஜ், சுசீந்திரகுமார், புதுச்சேரி மாநில செயலாளர் டாக்டர் பாஸ்கர், புதுச்சேரி மாநில பொருளாளர் வேல்முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *