திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கட்டக்குடி கிராமத்தில் தேசிய அளவிலான கபடி போட்டி இன்று தொடங்கியது. மூன்று நாள் நடைபெற உள்ள தேசிய அளவிலான கபடி போட்டியில் முதல் நாள் இன்று தொடக்க ஆட்டத்தில் சாய் மயிலாடுதுறை அணியும் , புனே மாநிலம் அணியும், ராஜஸ்தான், மற்றும் SRM சென்னை அணிகளும் மோதியது.
அதனை தொடர்ந்து டெல்லி,கேரளா, நாக்பூர், சண்டிகர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கபடி அணியினர் இப்போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இங்கு நடைபெற உள்ள போட்டியில் ஆண் பெண் என இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடைபெறுகிறது. தேசிய அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.