தென்காசி ஜூன் 4
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வல்லம் கிராமத்தில் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக சார்பாக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது வல்லம் பேருந்து நிலையம் முன்பாக வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திரு உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது இதன் பின்னர் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லம் திவான் ஒலி தலைமையிலும் தென்காசி ஒன்றிய குழு பெருந்தலைவரும் ஜமீன் பஞ்சாயத்து கிளை செயலாளருமான ஷேக் அப்துல்லா முன்னாள் தமிழக அரசு கொரடாவும் சட்டமன்ற உறுப்பினரின் துணைவியார் மலிகா கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர் ஐயப்பன் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காதர் அண்ணாவி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் செல்வவிநாயகம் கிளை கழக செயலாளர் முத்துக்குமார் ஆர் கே செல்வம் ராசா ராமையா பரமசிவம் முருகேசன் சுதாகர் கருப்பசாமி சரவணன் ஈஷா முஹம்மது ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் முத்தையா சாமி செல்லப்பா ராசு ஒன்றிய பிரதிநிதி சந்திரன் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு திருவுருவப்படத்திற்கு மலர் தூவி நினைவுகூர்ந்தனர் .