தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம் அருகே கடந்த 25 நாட்கள் முன்பு ஸ்ரீ வாரி கார்டனில் 40 லட்சம் ரூபாய்க்கான நகை பணம் திருட்டு காவல்துறையினர் அதிரடியாக குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பொருள்களை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு சுப்புரத்தினம் (73) முன்னால் கோவில் மணியகாரர் (கோவில் தர்மகத்தா) ஸ்ரீ வாரி கார்டன் வீட்டில் உறவினரின் ஈமச்சடங்கு சென்ற பொழுது வீட்டில் யாரும் இல்லாத தெரிந்த இரு திருடர்கள் வெள்ளி குத்துவிளக்கு 21 பவுன் நகை இரக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர் சிசிடிவி அடிப்படையில் தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவகுமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து அக்யூஸை தேடி வந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் விஜயகுமார் என்ற அக்யூஸ்ட் பிடித்து விசாரித்த பொழுது இருவரில் ஒருவர் சிக்கியுள்ளார், இவர் மீது பல்வேறு காவல்துறையில் பல வழக்குகள் உள்ள நிலையில் ஏற்கனவே திருவாரூர் ஆவடி காஞ்சிபுரம் பகுதியில் உள்ள உள்ள பகுதிகள் திருடப்பட்டது தெரியவந்தது.

அவரை தாராபுரம் அழைத்து வந்து விசாரித்த பொழுது இங்குள்ள திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது அப்பகுதியில் ஆக்டிங் டிரைவர் ஆக வேலை செய்த விஜயகுமார் அவரது தந்தை கணபதி அய்ய நல்லூர், காமாட்சிபுரம், கும்மிடிப்பூண்டி, பெருமாள் கோவிலில், தெரு வசித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது அங்கு சென்று திருடப்பட்ட 21 பவுன் நகை காயின் வெள்ளி குத்துவிளக்கு மற்றும் டைமண்ட் நகைகளை பறிமுதல் செய்து மற்ற குற்றவாளியை தொடர்ந்தால் தேடி வருவதாக தெரிவித்தனர் இன்று அவரை தாராபுரம் கைது செய்து நீதிமன்ற ஒப்படைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர் தாராபுரம் ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் ஆறுக்கும் மேற்பட்ட காவலர்கள் மூன்று பிரிவிலாக பிரிந்து இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கண்டுபிடிக்கப்பட்டது தெரியவந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *