உலக சுற்று சூழல் தினம் திருவொற்றியூரில், மரக்கன்று நடும் விழா
திருவொற்றியூர், மே, 6- உலக சுற்று விழா தினத்தையொட்டி, திருவொற்றியூர் பகுதியில், மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
உலக சுற்று சூழல் தினத்தையொட்டி, நேற்று, சென்னை பெருநகர மாநகராட்சீ சார்பில், திருவொற்றியூர் மண்டலம் சார்பாக, 7வது வார்டு கார்கில் நகர் பகுதியில், மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மண்டல அலுவலர் பத்மநாபன், செயற்பொறியாளர் பாண்டியன் மற்றும் பாபு பங்கேற்றனர்.
திடக்கழிவுகளை மேற்கொள்ளும் ராம்கி நிறுவனத்தின் செயற் தலைவர் பிரபாகரனும் பங்கேற்று, சுமார் நான்கு மண்டலங்களில், 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.