38 ஆண்டுகால வீட்டுமணை கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் விஜய்க்கு தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் கோரிக்கை
தூத்துக்குடி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் இந்தியாவிற்கு தமிழகம் முன் மாதிரி மாநிலமாக திகழ வேண்டும் அதற்கு அனைவரும் ஓத்துழைத்து அனைத்து அமைச்சர்களும், அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் ஊடகத்துறையில் பணியாற்றும் பத்திரிகைத்துறை சார்ந்தவர்கள் கோரிக்கையும் நிறைவேற்றி தரப்படும் என்று பல்வேறு அறிவிப்புகள் சட்டமன்ற கூட்ட தொடரின் போது கடந்த காலத்தில் அமைச்சர்கள் வெளியிட்டனர். பல அறிவிப்புகள் அரசாணையும் வெளியிடப்பட்டது.
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இருந்ததை 1986ல் கடந்த 39 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் நெல்லையிலிருந்து தனி மாவட்டமாக தூத்துக்குடியை உருவாக்கி கொடுத்தார்.
தூத்துக்குடி மாவட்ட தலைநகரில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மானிய விலையிலான வீட்டுமனை இன்று வரை வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதை உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும் என்று கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட கோாிக்கையின்படி 2015ம் ஆண்டு முதல் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் தூத்துக்குடி அருகே சேர்வைகாரன் மடம் ஊராட்சியில் 3 ஏக்கர் 97 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அதன் முன் பகுதியில் உள்ள நுழைவு வாயில் தனியாருக்கு சொந்தமான பட்டா இடமாக இருந்தது இதை மாவட்ட நிர்வாகம் சம்மந்தப்பட்டவர்களிடம் பேசி அந்த இடத்தை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். அதை சீர்செய்து தருகிறோம் என்று உறுதியளித்தனர்.
அதன் பின் தனியாருக்கு சொந்தமான இடத்தின் உரிமையாளரிடம் பேசி அதற்கான தொகையை தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் பணம் கொடுக்கப்பட்டு புதுக்கோட்டை பத்திரபதிவு அலுவலகத்தில் ஆளுநர் பெயருக்கு பதிவு செய்யப்பட்டு அதன் ஒரிஜினல் ஆவணங்களை கடந்த 2020 பிப்ரவரி மாதம் 13ம் தேதி அப்போது கலெக்டராக இருந்த சந்திப் நந்தூரியிடம் அப்போது பிரஸ்கிளப் தலைவராக இருந்த சண்முகசுந்தரம், செயலாளராக இருந்த பிரபாகரன், ஆகியோர் ேநாில் வழங்கினார்கள்.
நெல்லை, மதுரை என பல மாவட்டங்களில் இரண்டு மற்றும் 3ம் கட்டமாக இடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தூத்துக்குடியில் பணியாற்றும் ஊடகத்துறையினருக்கு ஒரு முறைக்கூட வழங்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகத்தால் கேட்டுக்கொண்ட படி பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி முதல்வா் விஜய் எல்லா துறையிலும் தமிழகம் முன் மாதிரியாக செயல்பட வேண்டும் என்று பணியாற்றும் அவருக்கு செய்தித்துறை தான் வெளி உலகத்திற்கு ஆட்சியின் செயல்பாடுகளையும், கட்சியின் செயல்பாடுகளையும் கொண்டு வரும் துறையாகும்.
அந்த துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தூத்துக்குடி மாவட்டம் உருவாகி 39 ஆண்டுகாலம் நிறைவேறாத திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றி தரவேண்டும் என்று அப்போது தலைவராக சண்முகசுந்தரம், செயலாளராக பிரபாகரன், பொருளாளராக சீனிவாசன், துணைத்தலைவராக ராஜேஷ், இணைச்செயலாளராக ஜாய்சன், ஆகியோர் பொறுப்பில் இருந்த காலத்தில் வழங்கப்பட்டு 6 ஆண்டுகளாகியும் தமிழக அரசும் மாவட்ட நிா்வாகமும் தூத்துக்குடி பத்திாிகையாளா்களுக்கான கோாிக்கைகளை நிறைவேற்றி கொடுக்காமல் காலம் தாழ்த்தி கொண்டே செல்கின்றனா்.
ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறாத நிலை உள்ளது. இந்த நிலை மாறி பத்திாிகையாளா்களின் கோாிக்கையை முதல்வா் விஜய் நிறைவேற்றி தரவேண்டும் என்று தூத்துக்குடி பிரஸ்கிளப் தலைவா் சண்முகசுந்தரம், செயலாளர் மோகன்ராஜ், ெபாருளாளா் ராஜு துணைத்தலைவா் சிதம்பரம், இணைச்செயலாளர் சதீஷ்குமாா் உள்ளிட்ட கௌரவ ஆலோசகா்கள் சட்ட ஆலோசகா்கள் செயற்குழு உறுப்பினா்கள் மற்றும் உறுப்பினா்கள் சாா்பில் தொடா்ந்து கோாிக்கை வைத்து வருகின்றனா்.