திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பேருந்துகளை நிறுத்தவும் இயக்கவும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயால் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் பிரதாப் சிங், திருச்சி வருவாய் கோட்டாட்சியர் சாலைதவவளன், அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல பொது மேலாளர் சதீஷ்குமார், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுரேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். ஆட்சியர் அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
மண்னை
க.மாரிமுத்து.