சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய வித்யாலயம் சார்பாக உலக நல்லிணக்கம்,உலக அமைதிக்காக கோவையில் இராஜ யோக தியானம் நடைபெற்றது..

பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய வித்யாலயம் சார்பாக உண்மையான அன்பு,அமைதி,தூய்மையான மனநிலையை உணரும் வகையில் இராஜயோக தியான நிகழ்ச்சிகளை இலவசமாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர்..

இந்நிலையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை வ.ஊ.சி.பூங்கா அருகில் உள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில் நடைபெற்றது..

இதில் தினமும் யோகா செய்வதால் மன அழுத்தமற்ற வாழ்க்கை வாழ்வது,மன அமைதி கிடைக்க யோகா செய்வது குறித்த முறைகள் குறித்து கூறப்பட்டது…

பிரம்ம குமாரிகள் ஈஸ்வரி வித்யாலயம் கோவை பகுதி தலைவர் ராஜயோகினி பிரம்மகுமாரி ராஜேஸ்வரி,மற்றும் தாராபுரம் கிளை நிர்வாகி பவித்ரா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில்,ஆண்கள்,பெண்கள், பள்ளி மாணவர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..

இந்நிகழ்ச்சியில், பிரஜா பிதா பிரம்மகுமாரிகள் வரதராஜபெருமாள்,குமணன்,ராஜவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *