தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடத்தில் பழுதாகி நின்ற அரசு ஏசி பஸ்: 2 மணி நேரம் காத்திருந்த பயணிகள்.

கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு ஏசி பஸ், நடுவழியில் பழுதாகி குண்டடத்தில் நின்றுவிட்டது. இதனால் அதில் பயணம் செய்த பயணிகள் மாற்று பஸ் வரும்வரை 2 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கோவையில் இருந்து மதுரை நோக்கி அரசு ஏசி பஸ் ஒன்று புறப்பட்டது. வியாழக்கிழமை பிற்பகல் சுமார் புறப்பட்ட இந்தப் பேருந்து, குண்டடம் அருகே வந்தபோது மாலை 4.30 மணியளவில் பழுதாகி, குண்டடம் காவல் நிலையம் அருகே நின்றுவிட்டது. பேருந்தை இயக்க ஓட்டுநர் பல்வேறு முயற்சிகள் செய்தும், பேருந்தை தொடர்ந்து இயக்க முடியவில்லை.

ஏசி பஸ் என்பதால், அதில் வந்த பயணிகளை வேறு ஏசி பஸ்சில் அனுப்ப, அரசுப் போக்குவரத்துக்கழக கோவை பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவசரமாக செல்ல வேண்டிய பயணிகள் மட்‌டும் வேறு சாதாரண பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து வேறு மாற்று பஸ் வரும்வரை தாங்கள் கொண்டுவந்த உடமைகளோடு பயணிகள் 2 மணி நேரம் குண்டடம் பேருந்து நிறுத்தத்தில், கால்கடுக்க காத்திருந்தனர். மாலை 6.30 மணிக்கு மாற்று பஸ் வந்து சேர்ந்ததும், குண்டடத்தில் காத்திருந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் அதில் ஏற்றி அனுப்பப்பட்டனர்.

இது குறித்து பயணிகள் கூறியபோது, நீண்ட தூரம் செல்லும் பேருந்துகளை, குறிப்பாக குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பேருந்துகளை முறையாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *