செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கர்மவீரர் காமராஜரின் 124வது பிறந்தநாள் விழா கல்லூரி முதல்வர் சு. மாதவன் தலைமையில் நடைபெற்றது. காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு காமராஜரின் சேவையை நினைவுகூர்ந்தனர்.