செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கத்தில் புகழ்பெற்ற
இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இவ்விழாவில் நந்தி பெருமானுக்கு பால், தேன், பன்னீர்,சந்தனம், இளநீர்,உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகம் அலங்காரம் செய்து மூத்த அர்ச்சகர் சங்கர் சிவாச்சாரியார் தலைமையில் பக்தர்களுக்கு தீப ஆராதனை
காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நந்தியம் பெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.