அரியலூரில் இன்று துவங்கியது விதை திருவிழா விதைகள் கண்காட்சி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த விதைகள் கண்காட்சியை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் வழக்கறிஞர் கு சின்னப்பா கையெழுத்து போட்டு விதை திருவிழாவை துவக்கி வைத்தார்.
தமிழ் பண்பாட்டு பேரமைப்பு தலைவர் சீனி பாலகிருஷ்ணன் , அமைப்பு செயலாளர் ஆசிரியர் அரியலூர் நல்லப்பன், செயலாளர் கதிர்கணேசன், எல்ஐசி முருகேசன் தமிழ் களம் இளவரசன், தங்க சண்முகசுந்தரம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர், ஏராளமான பொதுமக்கள் விவசாயிகள் விதை திருவிழாவை கண்டுகளித்தனர்