அலங்காநல்லூர். ஜுலை. 27-
மதுரை மாவட்டம் பாலமேடு பூசாரி தோட்டத்தில் அமைந்துள்ள வரம் தரும் ஜோதி முருகன் கோவில் வளாகத்தில் இந்து ஆலய பாதுகாப்பு முன்னணி வீரத்தாய் குயிலி முன்னணி ஆதி ஜோதி கரசேவாஇயக்கம் இணைந்தகரங்கள் மகளிர் குழு சார்பாக இந்து ஆலய பாதுகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு மாநிலத் துணைத் தலைவர் சுரேந்திரன்,ஜி தலைமை தாங்கினார்
ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட தலைவர்குணசேகரன் மதுரை வடக்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்கண்ணன் முன்னிலைவகித்தனர்.
தென் பாரத அமைப்பாளர்சபரி மூர்த்தி வரவேற்றார் சிறப்பு அழைப்பாளர் நிறுவனத் தலைவர் பார்த்தசாரதிஜீ, கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்இதில் மாநில செயலாளர்கள் மருதமுத்து, சரண்,நீலகண்டன்,வீரத்தாய் குயிலி முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் ரீட்டா சரவணன், வடக்கு மாவட்ட செயலாளர் கணேசன், உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட மகளிரணியினர் இதில் கலந்து கொண்டனர்.