மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் புகழ்பெற்ற வைணவ ஆலயங்களில் பழமை வாய்ந்த கோயிலில் உள்ள உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டத்தில் 6 லட்சம் 41 ஆயிரத்து 516 ரூபாய் காணிக்கை இருந்தது. இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இக்கோயிலில் 10 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை 6 மாதங்களுக்கு ஒரு முறை திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்படுகிறது.
அதன்படி காணிக்கை உண்டியல்களில் எண்ணியதில் மொத்தம் ரூ 6 லட்சம் 41 ஆயிரத்து 516 ரூபாய் , 26 கிராம் தங்கம் , 157 கிராம் வெள்ளி வெளிநாட்டு பணம் ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா் . இதில் நிகழ்வில் இந்து அறநிலையத்துறை நாகை மண்டல துணை ஆணையர் பா.ராணி, கோவில் செயல் அலுவலர் எஸ். மாதவன் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.