திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுவிருந்து நடைபெற்றது. இதில் கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி, திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் எஸ்.ஜி. சீனிவாசன், மாவட்ட இணைச் செயலாளர் ஏ. ஆனந்தகுமார், சாரதி பிரகாஷ், மாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பொதுவிருந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் நற்சோனை மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.