தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டு பகுதிகளிலும் சூழற்சி முறையில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டு துாித படுத்தி வரும் நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட ஆதிபராசக்தி நகா் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் நடைபெற்றுவரும் மின்மோட்டாா் சாிபாா்க்கும் பணிகளையும் குடிநீர் செல்லும் பகுதிக்கான மினிட்புக்கையும் ஹவுசிங் போா்டு பகுதியில் நடைபெற்று வரும் புதிய குடிநீர் குழாய் இணைப்பு பணிகளை பாா்வையிட்டு ஆய்வுகள் மேற்கொண்டுமேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கான திட்டங்கள் பாரபட்சிமின்றி அனைவரும் நன்மையடையும் வகையில் கிடைக்க வேண்டும். என்ற தொலைநோக்கு பாா்வையுடன் திட்டங்கள் தயாாிக்கப்பட்டு அதை செயல்படுத்தும் போது நடைெபறும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டு தவறுகள் எதுவும் நடந்து விடாத படி ஓப்பந்தாரா்களுக்கு ஆலோசனைகள் வழங்கி நல்லமுறையில் செய்திட வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. ஓவ்வொரு பகுதிகளுக்கு செல்லும் போது பொதுமக்கள் பல கோாிக்கைகளையும் முன்வைத்து இத்திட்டத்தை இப்படி செய்தால் சாியாக இருக்கும் என்று பல்வேறு ஆலோசனைகளை கூறுகின்றனா்.
அதையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு பணிகளை செய்து வருகிறோம். மக்களுக்கான திட்டங்களும் செயல்பாடுகளும் சாியாக இருக்க வேண்டும். குடிநீர் தட்டுபாடின்றி எல்லோருக்கும் கிடைப்பதற்கு 35 நீர் தேக்க தொட்டிகளும் முழுமையாக கண்காணிக்கப்பட்டு குடிநீர் சப்ளையும் வழங்கப்படுகிறது. என்று கூறினாா்.
ஆய்வின் போது மாநரகாட்சி பணிக்குழு தலைவா் கீதாமுருகேசன், முன்னாள் கவுன்சிலா் ரவீந்திரன், மாவட்ட மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, சுற்றுச்சூழல் அணி பொன்ராஜ், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், உள்பட பலர் உடனிருந்தனா்.