தமிழகத்தில் புரளிகள் மூலம் குளறுபடிகளை ஏற்படுத்தி குளிா்காய நினைப்பவா்கள் எண்ணம் நிறைவேறாது நலத்திட்ட உதவிகளை வழங்கி மீனவா் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் சூளுரை


தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மீனவரணி சாா்பில் உலக மீனவா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற படகு போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பாிசளிப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தாா். மாவட்ட மீனவரணி செயலாளரும் தமிழ்நாடு மீனவா் நலன் வாாிய உறுப்பினருமான அந்தோணிஸ்டாலின், கவுன்சிலா் ரெக்ஸ்லின், மீனவரணி துணை அமைப்பாளர்கள் ஸ்மைலன், ஜேசையா, மாதவடியான், பெப்பின்காகு, தலைவா் அந்தோணி ராஜ், துணைத்தலைவர் அந்தோணி ராஜ், மாநகர தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் குமாா், துணை அமைப்பாளர்கள் நேவிஸ், ஜெனிபா், நீக்குலாஸ், ராஜா, ஜான்சன், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அமைச்சர் கீதாஜீவன் படகு போட்டியில் முதலிடம் பெற்ற ராஜீக்கு ரூ25ஆயிரம், இரண்டாம் இடம் பிடித்த விஜயனுக்கு ரூ 15 ஆயிரம், 3ம் இடம் பிடித்த ராஜேஷ்கும் ரூ 10 ஆயிரம் போட்டியில் கலந்து கொண்ட 11 பேருக்கு ஆறுதல்பாிசாக தலா ரூ 5 ஆயிரம் 5 நபருக்கு தையல் மிஷின், 100 பேருக்கு அலுமினிய டவேரா, 5 பேருக்கு ஐஸ் பாக்ஸ், ஆகியவற்றை வழங்கி பேசுகையில் மீனவர்கள் நலனில் அக்கறை கொண்ட திமுக அரசு மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. மீனவர்களின் நீண்டநாள் கோாிக்கையான தனக்கான ஓரு வங்கி திறக்கப்பட்டுள்ளது. மீன்பிடித்தடைக்கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படுகிறது.

பிற்படுத்தப்பட்டோரை மிகவும் பிற்படுத்தப்பட்டவராக கலைஞர் ஆட்சியில் அறிவிக்கப்பட்டதின் மூலம் நம்முடைய பிள்ளைகள் கல்வி வேலைவாய்ப்பு மருத்துவதுறை போன்ற வற்றிலும் மொிட் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர். கலைஞர் வழியில் தளபதியார் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது. 65 வயதில் நிரம்பியவா்களுக்கு ரேஷன்பொருட்கள் வீடு தேடி வருகிறது.

இப்படி ஓவ்வொரு திட்டத்தையும் தமிழக மக்களின் நலன் கருதி முதலமைச்சா் தளபதியாா் செயல்படுத்தி வருகிறாா். தமிழகம் எல்லாவகையிலும் வளர்ச்சியடைந்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியாத பாசிச குரூப்புகள் எஸ்ஐ ஆர் என்ற சிறப்பு தீவிர வாக்கு திருத்தம் மூலம் நம்முடைய வாக்கு உாிமையை பறிக்கும் செயலில் ஈடுபடுகிறது. அதற்கு நாம் இடமளித்துவிட கூடாது. அனைவரும் ஓற்றுமையாக கலாச்சாரம் பண்பாடுகளை பின்பற்றி வருகிறோம் ஜாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் நம்மை பிாித்தாலும் சூழ்ச்சியை சிலா் மேற்கொள்ள நினைக்கின்றனா் அது ஒரு நாளும் தமிழகத்தில் நிறைவேறாது பல்ேவறு வகையில் புரளிகளையும் குளறுபடிகளையும் ஏற்படுத்த வேண்டும் என்று ஓரு கும்பல் உலா வந்து கொண்டு திமுக கூட்டணியில் பிாிவினையை ஏற்படுத்தலாம் என்று நினைக்கின்றனா். அது ஓரு காலமும் நடைபெறாது என்று பேசினார்.


விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், தலைவர் நலம் ராஜேந்திரன், மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், வட்டச்செயலாளர்கள் டென்சிங், லியோ ஜான்சன்,பகுதி அணி அமைப்பாளர்கள் சூா்யா, சுரேஷ்குமாா், காசிராஜன், கவுன்சிலர் பவாணி மாா்ஷல், முன்னாள் கவுன்சிலா் இசபெல்லா, முன்னாள் பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், மாா்ஷல் மகளிா் அணி கன்னிமாியாள் டோலி, மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *