அரியலூரில் நடந்தது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் தேசிய தேர்வு முகமையும் என் ஜே ஏ நிர்வாகத் தோல்விகள் நீட் கியூட் யூஜி நெட் போன்ற தேர்வுகளில் தொடரும் வினாத்தாள் கசிவுகள் மற்றும் கல்வித்துறையின் நிர்வாக சீர்கேட்டினை கண்டித்தும் சீர் செய்ய மறுத்து வரும் ஒன்றிய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஷேக்தாவூத் தலைமை தாங்கினார் வட்டக்கிளை துணை செயலாளர் வெங்கடாசலம் அனைவரையும் வரவேற்று பேசினார் துணை வட்ட தலைவர் சிவதாஸ் ரத்தினம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் செயலாளர் நிவேதா அனைவருக்கும் நன்றி கூறினார்