தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு பகுதி, மேற்கு பகுதி,ஆகிய பகுதிகளில் உள்ள 20 பாகங்கங்களை உள்ளடக்கிய கிளைக் கழக நிர்வாகிகள் , வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பயிற்சி பட்டறை மற்றும் ஆலோசனைக் கூட்டம் பகுதி கழகச் செயலாளர்கள் , முருகன், சந்தனப்பட்டு, ஆகியோர் ஏற்பாட்டில் தூத்துக்குடி தெற்கு
மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் , முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு , தூத்துக்குடி தெற்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்களான கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ வுமான பி.ஜி. ராஜேந்திரன், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் கல்லூர் இ. வேலாயுதம், மற்றும் ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட ஐ டி விங் பொறுப்பாளர் விஜயவேல்,மதன், அசோக் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்தம் மற்றும் சிறப்பு முகாமில் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட BL A 2 செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனைகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஆறுமுக நயினார், கழக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணைச்செயலாளர் பெருமாள் சாமி, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் இரா. சுதாகர்,மாவட்ட கழக பொருளாளர் சேவியர்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், இணைச்செயலாளர் சத்தியா லட்சுமணன் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல் ராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுகந்தன் ஆதித்தன், வழக்கறிஞர் அணி இணைச்செயலாளர்கள் ஆண்ட்ரு மணி, சரவணபெருமாள்,முனியசாமி,ராஜேஷ்குமார்,சிவசங்கர்,பகுதி கழக செயலாளர் ஜெய கணேஷ்,ஒன்றிய கழக செயலாளர்கள் கால்வாய் பரமசிவன், ஜவஹர்,தூத்துக்குடி மண்டல அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு செயலாளர் ஆர். கல்விகுமார், இணைச் செயலாளர் கே.டி சி. வி லட்சுமணன்,எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் டைகர் சிவா, வழக்கறிஞர் பிரிவு முகேஷ் ராஜா,மாவட்ட இலக்கிய அணி செயலாளர் இணைச்செயலாளர் ஜான்சன் தேவராஜ், அண்ணா ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், மகளிர் அணி நிர்வாகிகள் முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, மெஜிலா, இந்திரா ,ராஜேஸ்வரி, தமிழரசி அன்னபாக்கியம், வட்ட கழகச் செயலாளர்கள் கொம்பையா, சொக்கலிங்கம், சுப்பிரமணி, வெங்கடேஷ் ,ரங்கன், ரகுநாதன், ஈஸ்வரன், அந்தோனிராஜ், பாம்பு கோயில் முருகன், அசோகன், தாமஸ், மற்றும் இசக்கி, குற்றாலம் ரவி சாம்ராஜ், சகாயராஜ், பால ஜெயம்,சுந்தேரசன், பரிபூரண ராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.