திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கல்வி மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணி பேரூராட்சி அத்திகுளம் பகுதியில் உள்ள அரசின் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில் சுமார் 1300 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளி வளாகத்தில் நம்ம ஊர் நம்ம பள்ளி திட்டத்தின் கீழ் 6 வகுப்புரைகள் கொண்ட கட்டிடம் கட்டுவதற்கு ரூபாய்1. கோடியே 21லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நிறைவு பெற்ற பல்வேறு அரசு வளர்ச்சிப் திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்க வருகை தந்த தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முடிவற்ற பணிகளை திறந்து வைத்தார்.மேலும் புதிய பணிகளை துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து ஆரணி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் காவேரி தலைமை தாங்கி அடிக்கல் நடவு செய்தார். இதில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஹேமா பூசனம், பொருளாளர் சீனிவாசன், உறுப்பினர்கள் ரவிச்சந்திர பாபு,ஆரணி பேரூர் திமுக செயலாளர் பி.முத்து, எஸ் எம் சி தலைவர் நந்தினி, துணைத் தலைவர் டில்லி, ஆரணி பேரு திமுக பொருளாளர் கு. கரிகாலன், வார்டு செயலாளர்கள் மகி, சாலேக், திமுக நிர்வாகிகள் உதயகுமார், சந்தோஷ் பிரபா, மற்றும் பள்ளியின் இருப்பாள் ஆசிரியர்கள் உன்கிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முன்னதாக பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் தேவராஜ், பாஸ்கர் பாபு ஆகியோர் வரவேற்றனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ரேவதி நன்றி கூறினார்..
செய்தியாளர் சீனிவாசன்.