SDPI கட்சியின் கோவை மத்திய மாவட்டத்திற்க்கு உட்பட்ட வடக்கு சட்டமன்ற தொகுதியின் சார்பாக வடக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. தொகுதி தலைவர் அஜிஸ் தலைமையில் நடைபெற்றது
தொகுதி செயலாளர் தளபதி பாபு முன்னிலை வகித்தார் கேகே நகர் கிளை தலைவர் நிசார் அவர்கள் தொகுப்பரை வழங்கினார். நிகழ்ச்சியின் முதலாவதாக மாநில பொருளாளர் முஸ்தபா கட்சி கொடி கொடி ஏற்றி வைத்தார்.
திறப்பு விழாவிற்க்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட S DPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.
உடன் மாநில பொதுச் செயலாளர் நிஜாமுகைதீன் , மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா உசேன், கோவை மத்திய மாவட்ட தலைவர் முகமது இஷாக் மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் இப்ராஹிம் மாவட்டச் செயலாளர் அபுதாஹிர், மாவட்டத் துணைத் தலைவர் அப்துல் ரஹீம் மாவட்ட பொருளாளர் மீடியா மன்சூர், மண்டல ஐடி விங் செயலாளர் சிக்கந்தர் மற்றும் விமன் இந்தியா மூவ்மெண்ட் மண்டல தலைவி பரிதா மாவட்ட தலைவி காமிலா அவர்களும் மாவட்டத் துணைத் தலைவர் சல்மா தொகுதி தலைவர் ஆஷா தொகுதி செயலாளர் குருஷித் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் வடக்கு தொகுதி நிர்வாகிகள் கவுண்டம்பாளையம் தொகுதி நிர்வாகிகள் கிளை தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் செயல்வீரர்கள் ஜமாத்தார்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அலுவலக திறப்பு விழாவின் போது மாநிலத் தலைவர் முன்னிலையில் பல்வேறு மாற்றுக் கட்சியில் இருந்து எஸ் டி பி ஐ கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட திரளான பெண்கள் உட்பட்ட நபர்கள் எஸ்டிபிஐ கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்