உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் ஒட்டி ஒரு நாள் முழுவதும் பொதுமக்களுக்கு இலவசமாக டீ வழங்கிய தினந்தோறும் வரும் வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்த திமுகவினர்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49 வது பிறந்தநாள் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பொதுவாக பல்வேறு கட்சியினர் தலைவர்களின் பிறந்த நாளை வெளிப்படையாக வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் உணவு வழங்கும்போது நிலையில் காஞ்சிபுரம் மாநகர திமுக இளைஞரணி சார்பில் டீ மற்றும் சாலையோர டிபன் கடைகளில் தினந்தோறும் உணவு அருந்த வரும் வாடிக்கையாளர்களுக்கு பணம் வாங்காமல் அனைவருக்கும் இலவசமாக வழங்கி வருகிறார்.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பூக்கடை சத்திரம் பகுதியில் திமுக காஞ்சி மாநகர இளைஞரணி சார்பில் மாநகர திமுக இளைஞரணி அமைப்பாளர் சுகுமார் ஏற்பாட்டில் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி இன்று ஒரு நாள் முழுவதும் தூய்மை பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், உழைப்பாளர்கள் என அனைத்து பொதுமக்களுக்கும் இன்று ஒரு நாள் முழுவதும் இலவசமாக டீ வழங்கி டீக்கடைக்கு வரும் தினம் தோறும் வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

இன்று ஒரு நாள் இலவசமாக டீ வழங்குவது ஒட்டி ஏராளமான பொதுமக்கள் காத்திருந்து டீ வாங்கி அருந்தி சென்றனர்

மேலும் பூக்கடை சத்திரம் பகுதியில் தினந்தோறும் காலையில் செயல்படும் நடைபாதை உணவு கடையில் 2000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு காலை சிற்றுண்டியை வழங்கி கொண்டாட்டம்

நடைபாதை உணவகத்தில் தினந்தோறும் உணவு அருந்த வரும் பொது மக்களுக்கு இலவசம் என்று தெரியாமல் பணம் வழங்கும் பொழுது உதயநிதி பிறந்தநாள் ஒட்டி அனைவருக்கும் இலவசம் என கூறி இன்ப அதிர்ச்சியை கொடுத்த மாநகர திமுக இளைஞரணி அமைப்பாளர் சுகுமார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *