சீர்காழியில் கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகுடன் தயார் நிலையில் உள்ளனர்

டிட்வா புயல் மற்றும் கனமழை வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், ஆவடியில் இருந்து 13 வது பட்டாலியன் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் தலைமை காவலர் சாமுவேல் தலைமையில் சீர்காழிக்கு 30 பேர் வந்துள்ளனர்,

இடர்பாடுகளின் சிக்கியுள்ளவர்களை மீட்க உதவும் கருவிகள் அரிவாள், பாறை, மண்வெட்டி, மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் ரப்பர் படகு மேலும் அதி நவீன தகவல் தொடர்பு உபகரணங்கள் என 60 வகையான கருவிகளுடன் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மேலும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் இடர்பாடுகளை எதிர்கொள்ள தயாராக உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *