மதுரையில் அரசு பள்ளி, டென்ட் சொசைட்டி, சக்கிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம், எல்.கே.பி நகர் அரசு பள்ளி ஆகியவை இணைந்து சக்கிமங்கலத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
டென்ட் சொசைட்டி செயலாளர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். ஆசிரியர் ராஜாங்கம் வரவேற்று பேசினார். எய்ட்ஸ் பரவும் விதம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சக்கிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சாந்தகுமார் உரை நிகழ்த்தினார்.
உலக எய்ட்ஸ் தினம் குறித்து தலைமை ஆசிரியர் தென்னவன் பேசினார் . சக்கிமங்கலம் கிராமத்தில் பேரணி நடைபெற்றது. பேரணியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு வாசகங்கள் ஒலிக்கப்பட்டன. டென்ட் சொசைட்டி பணியாளர் சிவா நன்றி கூறினார்.
பேரணியில் சக்கிமங்கலம் கிராம பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.