பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர். மதிவேந்தன்
வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பாண்டமங்கலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்
2025_26ற்கான இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தலைமையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.மூர்த்தி அவர்கள் முன்னிலையில் 74 பள்ளிகளைச் சேர்ந்த 6639 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு சிறப்பு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள்.
நமது திராவிட மாடல் ஆட்சியில் மாணவ, மாணவியர்கள் சமுதாயத்தில் கல்வி அறிவு, வேலைவாய்ப்பு பெற்று அதன் மூலம் சிறந்த வாழ்வாதாரத்தை பெற்றிட வேண்டும் என்ற நோக்கத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
புதிய முயற்சிகள் மூலமாக பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வி துறை, தொழில் துறைகளில் கல்வியை அடிப்படையாக கொண்டு, வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் வளர்ச்சியை நிகழ்த்தியுள்ளார்கள்.
கொரோனா தொற்று காலத்தில், மாணவர்களின் கல்வி தடைபடக்கூடாத என்பதற்காக அவர்களின் இல்லத்திற்கே வந்து கல்வியை வழங்கும் இல்லம் தேடி கல்வி திட்டத்தினை அறிமுகப்படுத்தினார்கள். மாணவ மாணவிகள் காலையில் வெறும் வயிற்றோடு பசியோடு வரக்கூடாது கல்வி தடைபடும் என்பதற்காக காலை உணவுத் திட்டத்தை நமது முதலமைச்சராக அவர்கள் செயல்படுத்தி அதில் வெற்றியும் கண்டிருக்கின்றாரமாணவ மாணவிகளுக்கு தமிழ் புதல்வன் திட்டம் புதுமைப்பெண் திட்டம் ஆகியவற்றின் மூலம் மாதம் ஆயிரம் ஊக்கத்தகையை மாணவ மாணவிகள் பெற்று வருகின்றனர்.
நான் முதல்வன் வழிகாட்டி திட்டம், முதலமைச்சர் கோப்பை, விளையாட்டு மைதானம், பள்ளி குழந்தைகள் நூலகங்களை திறம்பட பயன்படுத்துவதற்காக சிறந்த முறையில் மாநிலம் முழுவதும் பல்வேறு நூலகங்கள், ஊராட்சிகளில் சிறிய நூலகங்கள் என பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் கல்வியில் முன்னேற வேண்டும் என்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.
அரசு மாணவ, மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லும் திட்டத்தினை வழங்கியவர் நமது முதலமைச்சர் அவர்கள். இதன் மூலம் அரசு மாணவர்கள் விமானத்தில் வெளி நாடுகளுக்கு அழைத்து சென்று அங்குள்ள உயர்ந்த பல்கலை கழகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே மாணவர்கள் நல்ல ஒழுங்கங்களை கற்று சிறந்த மாணவர்களாக திகழ்வதோடு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை பெருமை படுத்த வேண்டும் என மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் தெரிவித்தார்.
இன்றைய தினம் மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள், பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாண்டமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 380 மாணவர்களுக்கும், 890 மாணவியர்களுக்கும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 6639 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் P. முருகவேல் பேரூராட்சி துணைத் தலைவர் (பாண்டமங்கலம்), விளையாட்டு மேம்பாட்டு அணி துணைத் தலைவர் மகிழ் பிரபாகரன் வேலூர் கழகச் செயலாளர் முருகன் பரமத்தி ஒன்றிய செயலாளர்கள் தனராசு, முதன்மை கல்வி அலுவலர் எழிலரசி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) திரு.கு.சி.புருசோத்தமன், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.