அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
பொறியாளர் கவுன்சில் அமைத்துத் தர தமிழக அரசுக்கு கோரிக்கை அரியலூர் மாவட்ட கட்டுமான பொறியாளர் சங்கத்தின் சார்பாக அரியலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு சின்னப்பாவிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் மருத்துவர்களுக்கு உள்ளது போல பொறியாளர்களுக்கும் தனி கவுன்சில் அமைத்து தர வேண்டும் மேலும் மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி கிராம ஊராட்சிகளில் தனித்தனியாக பொறியாளர் பதிவு முறையை நீக்கி மாநிலம் முழுவதும் ஒரே பதிவு முறையை முறையாக்க வேண்டும் சுய சான்று அடிப்படையில் கட்டிட அனுமதி விண்ணப்பம் விண்ணப்பிக்கும் போது உண்மை தன்மை அறிய பொறியாளர்களுக்கு ஓடிபி வசதி வேண்டும் இதை தமிழக அரசு செய்து தர வேண்டும் இவ்வாறு சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு சின்னப்பாவிடம் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது
தலைவர் அறிவானந்தம் செயலாளர் நாகமுத்து பொருளாளர் கார்த்தி துணை தலைவர் செந்தில்குமார் உடனடி முன்னாள் தலைவர் அழகுதாசன் சாசன தலைவர் சீனிவாசன் முன்னாள் தலைவர் ஏ எஸ் ஏ செந்தில் குமார் அன்பழகன் இணை பொருளாளர் வேல்முருகன் ஆகியோர் உடன் இருந்து இந்த மனுவை வழங்கினார்கள்