தைப்பூச இருமுடி விழாவை முன்னிட்டு மேல்மருவத்தூருக்கு தூத்துக்குடி மாவட்ட செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதத்தை துவக்கினர்.
மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அம்மா அவர்களின் அருளாசியுடன் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச இருமுடி விழா டிசம்பர் 15ம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. தைப்பூச இருமுடி விழாவில் கலந்துகொள்ள தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள், சக்தி பீடங்களில் இருந்து செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதமிருந்து இருமுடி கட்டிச்செல்லும் நிகழ்ச்சி தொடங்கியது.
சக்தி மாலை இரு முடி விழா கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆன்மிக இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்திமுருகன் தொடங்கிவைத்தார்.
கோவில்பட்டி, தூத்துக்குடி, பிள்ளையார்நத்தம், எம்.ஜி.ஆர்.நகர், இந்திராநகர், தளவாய்புரம், ஆசூர், கழுகுமலை, விளாத்திகுளம், நாகலாபுரம், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், உட்பட மாவட்டம் முழுவதும் சக்தி மாலை அணியும் நிகழ்ச்சி தொடங்கியது.
சக்தி மாலை இருமுடிகட்டிச் செல்லவிரும்பும் பக்தர்கள் தங்களுக்கு அருகில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் / சக்தி பீடங்களை தொடர்புகொள்ளலாம். இருமுடி பக்தர்களின் வசதிக்காக அதிவேக இரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்ல தெற்கு இரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை கண் டாக்டர். உமா, ஆன்மிக இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் பத்மாவதி, செல்வி, கோவில்பட்டி மன்ற தலைவர் அப்பாசாமி, இந்திராநகர் அழகு மாணிக்கம், பேச்சியம்மாள், சித்த மருத்துவர் வேம்பு கிருஷ்ணன், மகளிர் நிர்வாகிகள் கற்பகவள்ளி, காசியம்மாள், ராதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.