திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், பிருதூர் புனித வளனார் முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் நிகழ் சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வேப்பூர் புனித வளனார் பள்ளி தாளாளர் அருட்பணி AR அந்தோணிசாமி, அருட் சகோதரிகள் பிலோமினா, மேரி, ரெக்ஸ்லின் மைக்கேல் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரைகள் வழங்கினர்.
மேலும் மாற்று திறனாளிகள், இருளர் இன மக்கள் உள்ளிட்ட ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த 90 நபர்களுக்கு மளிகை பொருட்கள், பாய், ஆடைகள், பெட்ஷீட் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. முன்னதாக, மாணவ மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று, சிறப்பு அழைப்பாளர்களால் பரிசுகள் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
செய்தியாளர்: பா. சீனிவாசன் வந்தவாசி.