சகாதேவன் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம்

விஜயகாந்த் மறைவையொட்டி – வணிகர்கள் கடை அடைப்பு*மற்றும் அகரம் ஊராட்சி தேமுதிக நிர்வாகிகள் மொட்டை அடித்து நினைவு அஞ்சலி செலுத்தினர்

நடிகரும் , தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் காலமானதை அடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக போச்சம்பள்ளி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் வணிகர்கள் தங்களது கடைகளை அடைத்து இரங்கல் தெரிவித்தனர்.

இதேபோன்று போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் ஊராட்சி அகரம் கூட்ரோடு பகுதியில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஊராட்சி கழக செயலாளர் வரதன் ரமேஷ் சேரலாதன் ஆகியோர் கேப்டனின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர் அதைத் தொடர்ந்து கட்சி தொண்டர்கள் வரதன் உட்பட ஐந்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் மொட்டை அடித்து தனது இறுதி அஞ்சலி செய்தனர் இந்த நிகழ்வில் செந்தில் ஆனந்தன் ஹரிகரன் வெங்கடேசன் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர் அகரம் பகுதியில் அனைத்து கட்சிகளும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர் கேப்டனின் திருவுருவ படத்துடன் ஊர்வலமாகச் சென்றனர் இதனால் அகரம் பகுதியில் மக்கள் அனைவரையும் கண்கலங்க வைத்தது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *