பாபநாசம் அருகே இராஜகிரியில் அமைந்துள்ள அன்னை கதீஜா ரலி கல்வி மையத்தின் சார்பில்..

மாணவ-மாணவிகள் குர்ஆன் துவக்கம் மற்றும் நிறைவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா இராஜகிரியில் அமைந்துள்ள அன்னை கதீஜா ரலி கல்வி மையத்தின் 8-ஆம் ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றது. காயிதே மில்லத் திருமண மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 55-மாணவ, மாணவிகள் குர்ஆனை துவக்கம் செய்தனர்.

31-மாணவ மாணவிகள் குர்ஆனை நிறைவு செய்தனர். நிகழ்ச்சிக்கு மலேசிய டத்தோ வீரா சாகுல் ஹமீது தாவூது ஷாஃபி தலைமை தாங்கினார்.

முகமதுநாசர், முஹம்மதுகஜ்ஜாலி, முஹம்மது ரபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹஜ்ரத் நைனார் முஹம்மத் குர்ஆனை துவக்கம் மற்றும் நிறைவு செய்தும், ஹஜ்ரத் சாகுல் ஹமீது மாணவ மாணவிகளை வாழ்த்தியும், முகம்மது அனீஸ் வரவேற்புரையும் வழங்கினர்.

நிகழ்ச்சியில் தலைவர் யூசுப்அலி, முகமதுபாரூக், முஹம்மதுசுல்தான், முல்லா பாரூக், முத்தவல்லி ரவூப், காசிம் ,ஹபீப் முஹம்மது ,சபீர் அகமது, மாலிக், மலேசியாவில் இருந்து டத்தின் சப்ரினா, சுகைனா தில்சாத் கல்வி மைய ஆசிரியர் மாணவ மாணவியர் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவியருக்கு சான்றுகள் மற்றும் அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர்களுக்கு அன்னை கதிஜா கல்வி மையம் மற்றும் வெல்பர் சார்பாக சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *