கரூர் செய்தியாளர் மரியான் பாபு
வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் இ.வை பசுபதி விருப்பமனு..
பொது தேர்தல் வருகின்ற 2026 ல் நடைபெறவுள்ள நிலையில் கரூர் மாவட்டம் அரவகுறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாமக சார்பாக பொற்கொடி சுரேஷ் போட்டியிடுவதற்க்காக சென்னை சோளிங்கநல்லூரில் பாமக சார்பில் விருப்ப மனு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையொட்டி வன்னியர் சங்க கரூர் மாவட்ட செயலாளர் இ.வை.பசுபதி முன்மொழிந்து பொற்கொடி சுரேஷ்-ன் விருப்ப மனுவினை பாமக
மாநில ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மு.கார்த்தி மற்றும் மாநில இணை பொது செயலாளர் க.வைத்தி ஆகியோரிடம் கரூர் மேற்கு மாவட்ட மாவட்ட செயலாளர் புகழூர் க.சுரேஷ் முன்னிலையில் வழங்கினார்.
உடன் மாவட்ட அமைப்பு செயலாளர் பு ஆ.குணசீலன், மாநில செயற்குழு உறுப்பினர் செ.ஞானசேகரன், மாவட்ட துணை செயலாளர் வாங்கல் சதீஸ், ஒன்றிய செயலாளர் வடிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.