திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே வலங்கைமான் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் இந்தியாவின் இரும்பு பெண்மணி, அன்னை இந்திராவின் 41- வது நினைவு தினம் வலங்கைமான் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில், காங்கிரஸ் தொழிற்சங்கம் ஐஎன்டியுசி திருவாரூர் மாவட்ட தலைவர் குலாம் மைதீன் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக வட்டார சேவாதள தலைவர் கே.என்.ஆர்.இளங்கோவன் அன்னாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து,அன்னை இந்திரா நினைவுப் போட்டியில் பங்கு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி அன்னை இந்திராவின் அரும் பெரும் சாதனைகளை விளக்கி பேசினார்கள்,
முன்னதாக சுவாமி நாதன் அனைவரையும் வரவேற்றார்
அன்னை இந்திராவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் முன்னதாக இந்திராவிக்கு அனைவராலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.இதில் இளைஞர்களும், மாணவர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.