செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்
மின்னல் சித்தாமூர் ஊராட்சிக்குட்பட்ட கீழ்ப்பட்டு மற்றும் கீழ்மின்னல் ஊராட்சியில்
28 லட்சம் மதிப்பீட்டில் மக்கள் பயன்பெறும் வகையில் புதிய பேருந்து நிலையம் மற்றும்
குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட குழு உறுப்பினர் வசந்தா கோகுலகண்ணன் மேம்பாட்டு நிதியிலிருந்து 19, லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியும்
9 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஒரத்தி கே.கண்ணன், அச்சிறுப்பாக்கம் மத்திய ஒன்றிய கழக செயலாளர் டி.வி.கோகுலகண்ணன்,ஆதி திராவிடர் நலக்குழு மாவட்ட துணை அமைப்பாளர் ஜி.சிவக்குமார், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் பாலாஜி, ஆசிரியர் ஜெயராமன் வழக்கறிஞர் ஆறுமுகம் கழக மூத்த முன்னோடி ராஜன் துணைத் தலைவர் அஞ்சலி விநாயகம், கிளை செயலாளர்கள்
துரை, வேலாயுதம், மணி, தவமணி, மற்றும் மகளிர் அணியினர் விஜயா,
ஒப்பந்ததாரர் வீரராகவன்,மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலர் கலந்து கொண்டு புதிதாக அமையவிருக்கும் அரசு கட்டிடங்களுக்கு பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டனர். இதில் கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.