தென்காசி மாவட்டம்,
பழைய குற்றாலம், ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 152 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் நிஷோக்.க.அ. சர்வேஷ் குமார்.மு ஆகிய இரண்டு மாணவர்கள் 494/500 மதிப்பெண்கள் பள்ளி அளவில் முதலிடத்தையும், சிவ ஹரிஷ் பூ, மனீஷ் குமார். சு ஆகியோர் 491/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடத்தையும், கோகில் கார்த்திக். த. ஸ்ரீ பாலமுருகன். க ஆகியோர் 490/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதிய மாணவர்களில் கணிதப் பாடத்தில் 19 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் 2 மாணவர்களும், சமூக அறிவியல் பாடத்தில் 1 மாணவரும் 100/100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

490 மதிப்பெண்களுக்கு மேல் 6 மாணவர்கள்
480 மதிப்பெண்களுக்கு மேல் 16 மாணவர்கள்
475 மதிப்பெண்களுக்கு மேல் 32 மாணவர்கள்
450 மதிப்பெண்களுக்கு மேல் -77 மாணவர்கள்
ஆங்கிலப் பாடத்தில் 16 மாணவர்கள் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

10ம் வகுப்புப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் ஆர்.ஜெ.வி.பெல் அவர்களும். செயலாளர் கஸ்தூரி பெல் அவர்களும். பள்ளி முதல்வர் டாக்டர் அலெக்சாண்டர், தலைமை ஆசிரியை செ. குயின் எலிசபெத் மற்றும் அனைத்து ஆசிரிய, ஆசிரியைகளும் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *