சின்னமனூர் ஐயப்பா சேவா சங்க மணி மண்டபத்தில் மண்டல பூஜையை முன்னிட்டு படி பூஜை மணிமண்டபத் தலைவர் தலைமையில் நடைபெற்றது
தேனி மாவட்டம் செப்பேடு புகழ் சின்னமனூர் நகரின் ஐயப்ப சேவா சங்க பட்டிமன்றத்தில் 18 படிகளுக்கு படி பூஜை செய்து மண்டல பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிக்கு ஐயப்பா சேவா சங்க மணி மண்டபம் தலைவர் கே எஸ் பெருமாள் ரெட்டியார் தலைமை வகித்தார் குருசாமி இ. லோகேந்திர ராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்த பூஜையில் சின்னமனூர் ஐயப்ப பக்த பஜனை சார்பில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெற்றது
இதனை தொடர்ந்து ஐயப்பா சேவா சங்க மணிமண்டபத்தில் உள்ள 18 படிகளுக்கு படி பூஜை நடத்தப்பட்டது மலர் ளால் அலங்கரிக்கப்பட்ட படிகளுக்கு பூஜைகள் நடந்தன ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் குருசாமி இ லோகேந்திரராஐன் தலைமையில் குருசாமிகளால் நடத்தப்பட்டது நேற்று மண்டல காலத்தை முன்னிட்டு மண்டலா அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டன
ஏராளமான ஐயப்ப பக்தர்கள் முருக பக்தர்கள் இந்த பூஜைகள் பங்கேற்று அருளாசி பெற்றனர் இதையடுத்து சுவாமி ரத ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளான சீப்பாலக்கோட்டை ரோடு கம்பம் ரோடு கண்ணாடி க்கடை மூக்கு மார்க்கயன் கோட்டை ரோடு உள்பட நகரின் முக்கிய பகுதிகளின் வழியாக ஊர்வலம் வந்தது ஏராளமான ஐயப்ப மற்றும் முருக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மனம் உருக சரண கோஷமிட்டு ஊர்வலம் இந்த ஐயப்பனை தரிசித்து அருள் ஆசி பெற்றனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஐயப்பா சேவா சங்க மணி மண்டப தலைவர் கே எஸ் பெருமாள் குருசாமி இ லோகந்திரராஜன் மற்றும் ஐயப்ப சங்க மணிமண்டப நிர்வாகிகள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்