ஏபி. பிரபாகரன் செய்தியாளர்

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைப்பெற்றது.

இந்த மனு முகாமில் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையிடம் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் தங்கவேல் (மாவட்ட குற்றப் பிரிவு) வளவன் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு) மற்றும் மங்களமேடு துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜனனி பிரியா ஆகியோர்கள் பொது மக்களிடம் மனுவைப் பெற்றார்கள்.

மேலும் இந்த சிறப்பு முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையம் மற்றும் சிறப்பு பிரிவு காவல்துறையினர் கலந்து கொண்டார்கள். இந்த சிறப்பு மனு முகாம் மூலம் 22 மனுக்கள் பெற்றப்பட்டு மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைப்பெறும் எனவும் பொது மக்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறும் மனு விசாரணை முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் மாவட்ட காவல் அலுவலகம் வருவதற்கு ஏதுவாக மாவட்ட காவல்துறை சார்பாக பாலக்கரையிலிருந்து காவல் அலுவலகத்திற்கும் மீண்டும் காவல் அலுவலகத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்ல பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *