பெரியகுளம் அருகே கைலாச பட்டியில் சமுதாய கூடத்தை திறந்து வைத்த எம் எல் ஏ தேனி மாவட்டம் தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட கைலாச பட்டி பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு சமுதாயக்கூடம் கட்டி தர வேண்டும் என்று பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் தென்கரை பேரூராட்சி செயல் அலுவலர் குணாளன் பேரூராட்சி மன்ற தலைவர் வே. நாகராஜ் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர் இதனை உடனடியாக பரீசலீத்த எம் எல் ஏ தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 70 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று கட்டி முடிக்கப்பட்டது
இதனை தொடர்ந்து கட்டி முடிக்கப்பட்ட புதிய சமுதாய கூடம் திறப்பு விழா நடைபெற்றது இந்த விழாவிற்கு எம் எல் ஏ கே எஸ் .சரவணகுமார் பேரூராட்சி மன்ற தலைவர் வே. நாகராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார் பேரூராட்சி செயல் அலுவலர் குணாளன் துணைத் தலைவர் ராதா ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் தலைமை வகித்தனர் எம் எல் ஏ சரவணகுமார் புதிய சமுதாயக்கூடத்தை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்
தென்கரை பேரூர் திமுக செயலாளர் பாலமுருகன் தென்கரை பேரூராட்சி மன்ற தலைவர் மன்ற தலைவர் வே.நாகராஜ் தாமரைகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் ச
பால்பாண்டி பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் ராதா ராஜேஷ் திமுக
ஒன்றிய அவைத்தலைவர் திருகுமரன் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் திமுக
வார்டு செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இளநிலை உதவியாளர் பிரபாகரன் நன்றி கூறினார்