தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளரும், 39 வட்டக் கழக செயலாளருமான திருச்சிற்றம்பலம். ஏற்பாட்டில்  அமைக்கப்பட்டிருந்த கோடைகால நீர்,மோர் பந்தலை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு தர்பூசணி, ஆப்பிள்,மாதுளை,ஆரஞ்ச்,செவ்வாழை பழம்,  உள்ளிட்ட பழவகைகளையும், இளநீர்,,மோர், சர்பத்,பழரசம்  உள்ளிட்ட குளிர்பானங்களையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள் சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளருமான இரா.சுதாகர், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், மாவட்ட மகளிரணி செயலாளர் நாசரேத் R.ஜூலியட், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன்,  மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் டைகர் சிவா, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜே பிரபாகர், முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் சரவணபெருமாள், மாவட்ட இளைஞர் பாசறை பொருளாளர் பரிபூரண ராஜா, முன்னாள் கவுன்சிலர் தமிழரசி, வட்டப் பிரதிநிதிகள் சங்கர வடிவு, ஒர்க் ஷாப் ரமேஷ், முருகன், போட்டோ பார்க் சங்கர், எம்ஜிஆர் மன்றம் பழனி. தங்க மாரியப்பன். கனகவேல். சங்கர். யுவன் பாலா. திலகர். உதயகுமார். உள்ளிட ஏராளமான அதிமுக கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் வட்டக் களச் செல்வாரமான திருச்சிற்றம்பலம் சிறப்பாக செய்திருந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *