திருச்சி மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து விளக்கினார். மேலும், 5200 தூய்மைப் பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கப்பட்டது.
மண்னை
க.மாரிமுத்து.