திருப்பூர் திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காங்கயம், திருப்பூர்ரோடு, புலிக்கல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி, இவரது மனைவி கடந்த 15வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்ட நிலையில் மகள் சோபிகா(19). உடன் வசித்து வந்தார். சோபிகா காங்கயம் அருகேயுள்ள அரசு கல்லூரியில் படித்து வந்தார்.
நேற்று அதிகாலை பழனிசாமி காய்கறிக்கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது வீட்டின் பெட்ரூமில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றிய புகாரின் பேரில் காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.