மணப்பாறை அடுத்த பிராம்பட்டியைச் சேர்ந்த செல்வி (48) பிப்ரவரி 17 அன்று மாலை தனது கிராமத்திலிருந்து வளநாடு செல்ல இருசக்கர வாகனத்தில் உதவி கேட்டு பின்னால் அமர்ந்து சென்றார். ராஜாபட்டி குளம் அருகே சென்றபோது இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்த செல்வி, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து வளநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்னை
க.மாரிமுத்து.