எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அடுத்த மருவத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் மகன் விஜய் (33). இவர் கடந்த 11-ம் தேதி மாமல்லபுரம் திருவிடந்தை பகுதியில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு மாநாட்டில் பங்கேற்க கட்சியினருடன் வேனில் புறப்பட்டு சென்றனர். சீர்காழி அருகே அட்டகுளம் பகுதியில் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் விஜய் உட்பட ஆறு பேர் காயமடைந்து சீர்காழி அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டனர். இதில் விஜய் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் விபத்தில் இறந்த விஜயின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிட பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் வருகை புரிந்தார்.
விஜயின் பெற்றோரை சந்தித்து அன்புமணி ராமதாஸ் ஆறுதல் கூறினார். மேலும் வெளிநாட்டில் உள்ள விஜயின் சகோதரரை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு அவருக்கும் ஆறுதல் கூறிய அன்புமணி ராமதாஸ் விஜயின் பெற்றோரிடம் ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
மேலும் அவரது சகோதரருக்கு அரசு வேலை பெற்று தர முயற்சி செய்வதாகவும் உறுதி அளித்தார்.அப்போது பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பழனிச்சாமி,மாநில நிர்வாகிகள் ஐயப்பன், செந்தில் முருகன், இளைஞர் சங்க நிர்வாகி முருகவேல், நகர செயலாளர் வேல்முருகன்,ஒன்றிய செயலாளர் குமார், தியாகராஜன், பாரி உட்பட பலர் உடன் இருந்தனர்.