துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் நீர் வளத்துறை அலுவலகம் முன்புறம் இந்திய ரியல் எஸ்டேட் தரகர்கள் நல சங்கம் சார்பில் துறையூர் சங்கத் தலைவர் பாபு என்கிற அ.சாகுல் அமீது தலைமையில் இரண்டாம் ஆண்டு தண்ணீர் பந்தல் மே-12ந் தேதி துவங்கப்பட்டு முதல் நாள் வேலன் புரோமோட்டார்ஸ் ஸ்ரீகாந்த் சார்பிலும் , மூன்றாவது நாள் (மே-14) ஸ்ரீ சூர்யா பேட்டரி துரைசாமி சார்பில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு நீர் ,மோர், பானகம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து பொதுமக்களுக்கு 30 நாட்கள் நீர் மோர் வழங்கப்படும் என நில தரகர்கள் சங்கத்தலைவர் தெரிவித்தார்.

இதில் மாவட்டத் தலைவர் எஸ் திருமுகம் ,செயலாளர் எம் பி டி சி கண்ணன், பொருளாளர் டிங்கர் செல்வம், துணை செயலாளர் அம்மன் பி கிருஷ்ணகுமார், துணைத்தலைவர் மீசை பாலு மற்றும் துறையூர் தொகுதி நிலத்தரகர்கள் சங்க செயலாளர் சி ராஜதுரை,பொருளாளர் ஏ எஸ் செந்தில்குமார், துணை தலைவர் அண்ணாமலை பாலு ,துணை செயலாளர் ஜி விவேக் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *