தேனி மாவட்டம் ஜெய மங்கலம் சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

இதனைத் தொடர்ந்து பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் பள்ளிகளின் புதிய வகுப்பறை கட்டிடங்களை பள்ளி நிர்வாகத்தின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் பள்ளிக்கல்வித்துறை மற்றும் நபார்டு திட்டத்தின் கீழ் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 94.24. லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் ஜெயமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூபாய் 160.55.லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை பள்ளி நிர்வாகத்தின் பயன் பாட்டிற்க்கு குத்து விளக்கு ஏற்றி
எம் எல் ஏ சரவணகுமார் திறந்து வைத்தார்

இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் நகரச் முகமது இலியாஸ் தாமரை குளம் பேரூராட்சி மன்ற தலைவர் ச. பால்பாண்டி தென்கரை பேரூராட்சி மன்ற தலைவர் வே. நாகராஜ் வடுகபட்டி பேரூராட்சி மன்ற தலைவர் சி நடேசன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இருபால் ஆசிரியர்கள் கல்வித்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *