மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம்
தென்காசி ஜூலை 19
தென்காசி மாவட்டத்தில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வரும் சாரல் திருவிழா இந்த ஆண்டு ஜூலை மாதம் மாதம் 20 தேதி முதல் 27 வரையில் குற்றாலத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பாக சிறப்பாக செய்யப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோர் முன்னேற்பாடுகளை ஒவ்வொன்றையும் நேரடியாக கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சாரல் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சிகள் நடைபெறும் நிலையில் நாளை முதல் சாரல் திருவிழா தொடங்க இருக்கிறது. மேலும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பாக ஐந்தருவிப் பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் வரையில் மலர்க்கண்
காட்சி நடைபெறவுள்ளது.
சாரல் திருவிழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது பரதநாட்டியம், ஜிக்காட்டம், நையாண்டிமேளம் கரகாட்டம் மற்றும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சியும் கொழு கொழு குழந்தைகள் போட்டி, கிராமியகலைநிகழ்ச்சி, கைச்சிலம்பாட்டம் நிகழ்ச்சி, கேரளா மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சியும், யோகாசன போட்டிகள், நாட்டிய நாடகம், வில்லிசை நிகழ்ச்சி, தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சி, மற்றும் திரைப்பட மெல்லிசையும், படகுப்போட்டி, பல்சுவை நிகழ்ச்சி, கிராமிய கலை நிகழ்ச்சி, கொடைக்கானல் – பூம்பாறை பழங்குடியின மக்களின் தோடர் நடனம் நிகழ்ச்சி, கர்நாடக மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் திரைப்பட மெல்லிசையும், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியம், கவிதை மற்றும் பாட்டுப்போட்டி, திருநங்கைகள் வழங்கும் பல்சுவை நிகழ்ச்சிகள், கணியான்கூத்து நிகழ்ச்சி,
பரதநாட்டிய நிகழ்ச்சி, கர்நாடக மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் மெல்லிசை நிகழ்ச்சியும் கோலப்போட்டி, வில்லிசை நிகழ்ச்சி, மல்லர்கம்பம் நிகழ்ச்சி, பரதநாட்டியம் நிகழ்ச்சி, ஆந்திரா / தெலுங்கானா மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள், மற்றும் நாட்டுப்புற பல்சுவை நிகழ்ச்சியும், அடுப்பில்லாமல் சமைத்தல் மற்றும் சிறுதானிய உணவுப்போட்டி, நையாண்டிமேளம் மற்றும் கரகாட்டம், கிளாரிநெட் இசைநிகழ்ச்சி, தப்பாட்டம் நிகழ்ச்சி, ஆந்திரா / தெலுங்கானா மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள், மற்றும் திரையிசை தெம்மாங்கு நிகழ்ச்சியும், பளுதூக்குதல், வலுதூக்குதல் மற்றும் ஆணழகன் போட்டி, கிராமிய கலை நிகழ்ச்சி, நகைச்சுவை நிகழ்ச்சி, ஜிம்ளாமேளம் (எருதுகட்டு மேளம்) நிகழ்ச்சி, மெல்லிசை நிகழ்ச்சியும், நாய்கள் கண்காட்சி, நாட்டிய நாடகம் நிகழ்ச்சி, கிராமிய நாட்டுப்புற கலைநிகழ்ச்சி, மாடாட்டம் மற்றும் மயிலாட்டம் நிகழ்ச்சி, மகாராஷ்ரா மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.